search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவொற்றியூரில் மழை"

    திருவொற்றியூரில் நேற்று பெய்த மழையால் குடிசை சரிந்து விழுந்து பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் குப்பத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (40). பெயிண்டர்.

    மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் திருவொற்றியூர் குப்பத்தில் உள்ள குடிசை வீட்டில் தனிமையில் வசித்தார். வழக்கம் போல் நேற்று இரவு ஓலை கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நேற்று பெய்த மழையால் ரமேஷ் மீது ஓலை கூடாரம் சரிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொதுமக்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
    ×